Sunday, May 26, 2013

அகழ்வாரைத் தாங்கிய நிலம்

ஆறு வருடங்களுக்கு முன்னதாக..ஒரு குளிர் பிரதேசமாகவே பெங்களூரை பார்த்திருக்கிறேன். மலைவாசிக் குதிரைக்காரன் போல் உடல் மேல் ஒரு கம்பளிக் கோட்டுச் சட்டையை போட்டுக் கொண்டுதான் எப்போதும் இந்த நகரம் முழுதும் திரிந்திருக்கிறேன். ழையோடு  சேர்த்து பனியாகவும் பெய்து எப்போதும் ஈரத்தை வாங்கிக் கொண்டிருக்கும் இந்த நிலம். 

ஆனால் போன வருடம் வழக்கமான மழைக்காலம் இங்கே பொய்த்துப் போனது. நம்ம குற்றாலத்தில் சீசன் ஆரம்பித்த போது  இங்கே தூறல் மழை கூட பெய்யவில்லை. சென்ற வருடம் பெங்களுரின் "மழை மறந்த வருடம்" என வானிலை ஆய்வு அறிவித்தது.

இந்த முறை சீக்கிரமே கோடை காலம்  துவங்கி விட்டது. பூர்வீக பெங்களூர் மக்களுக்கு இந்த கோடையின் நீளம் புதிதாகவும் , அதன் சூடு அசாதாரணமாகவும் இருக்கிறது.

ஆனால் இந்த வெப்பம் எனக்கு ஒன்றும் புதிதில்லை. இந்த வெய்யிலும் கானலும் எனக்கு மிகவும் பழகிப்போனவைதான்.

இங்கே இப்போது ஆரம்பிக்கும் மழையற்ற வறட்சி. தண்ணீர்ப் பஞ்சம் எல்லாம் குழந்தைப் பருவத்திலேயே சாதாரணமாகிப் போனவை எனக்கு. மரங்கள் வெட்டப்பட்ட சாலைகளில்  நடக்கும் பொது உச்சியில் விழும் சூரியத் தணலுக்கும் எனக்கும் நெருக்கம் அதிகம்.

ஆனால் ,, என் சொந்த நிலத்தின் வானிலைக் கூறுகள்  இந்த நிலத்தின் உண்மைத் தன்மை மாறுபட்டு வெளிப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

மரங்கள் கொண்டாடிய நிலம் இன்று  நிழல்கள் தொலைத்து வெய்யில் நிலமாய் கருகிப்போகும் கதையை எப்படி பதிவு செய்வது?? 

இந்த முரண்பாட்டுத் தன்மையை உருவாக்கியதில் இந்த நிலம் செய்த தவறு என்னென்ன ??


  1. வெளிக்காற்றின் குளிரைச் சூறையாடி தொழிற்சாலைகளுக்குள் கொண்டு செல்லும் ஏ சி அறைகள் நிரம்பிய கட்டிடங்களைத் தாங்கி நின்று..நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தது...
  1. தனது தொண்ணூறு ஏரிகளில் என்பது ஏரிகளைமூடி விட்டு ஆங்கே அடுக்கு மாடிக் கட்டிடத்தின் அழகைச் சுமந்தது..
  1. தம் மக்கள் சொகுசுப் பேருந்து பயணம் செய்ய... குறிகிய தனது சாலைகளை அகலப்படுத்தியது , அதற்கு குறுக்கிட்ட மூத்த மரங்களை வெட்டிப் பிடுங்க அமைதி காத்தது .
  1. காடுகளாய் இருந்த பரப்பளவின் பாதிக்கு மேல் பத்திரப் பதிவிற்கு விலை போக பொறுமை காத்தது;
  1. etc etc


இங்கு வாழும் மென்பொருள்  மனிதர்களில் நானும் தான் ஒருவன். 

இந்த கோடையின் சூட்டை "இயற்கை என் மீது சூடு வைப்பது போல்" உணர்கிறேன். 

No comments:

Post a Comment